க - து: | மேலே இனியணி என்னும் சூத்திரத்து வல்லெழுத்தொடு புணருமாறு கூறினமையின் ஈண்டு முற்கிளந்தற்று என்றது ‘‘சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்’’ என்பது முதலாக அகரச்சுட்டிற்கு (சூ. 205, 206, 207, 208) ஓதியவற்றை என உணர்க. |
எ.டு: இஞ்ஞான்று, இந்நூல், இம்மலர் எனவும் இவ்யாழ், இவ்விரல், இவ்வணி, இவ்வாடை எனவும் ஈவயினான-ஈயிடை நின்றான் எனவும் வரும். “ஈகாண்டோன்றும்” என்பது ஈன் என்னும் சுட்டுப் பெயரின் ஈற்றழிவாகும். அதனைப் புறனடையாற் கொள்க. (ஈன்-இவ்விடம்) |