சூ. 24 :

அவற்றுள்

லளஃகான் முன்னர் யாவவும் தோன்றும்

(24)
 

க-து:

லள   என்னும்  இடையெழுத்தின்    முன்,    யவ   என்னும்
இடையெழுத்து மயங்குமெனக் கூறுகின்றது.
 

பொருள்:மேற்கூறிய நான்கனுள்  லள  என்னும்  இடையெழுத்துக்கள்
புள்ளியாக    நிற்க    அவற்றின்    முன்    ய வ   என்னும்   (உயிர்) மெய்யெழுத்துக்களும் தொடர்ந்து மயங்குதற்குரியவாம்.
 

யகர வகரங்கள் தம் இனத்தொடு  தொடர்தலின்  ஒலிநிலை  திரியாமல் மயங்கும். உம்மை இறந்தது தழுவிய எச்சஉம்மை.
 

எ-டு :வில்யாழ்  -  வெள்யானை - செல்வம்  கள்வர்  எனவரும்.
சொல்யாத்தான் -  வில்வளைத்தான்  எனப்  புணர்மொழியுள்ளும்  வரும். வில்யாழ், வெள்யானை என்பவை பண்புத்தொகை மொழி.
 

இவ்விரண்டு சூத்திரத்தானும் டறக்களின்  முன்னர்க்  கசப  என்பனவும் லளக்களின் முன்னர்க் கசபயவ என்பனவும் தனிமொழி தொடர்மொழிக்கண் இணைந்து நிற்கும் என்பதும் உணர்த்தப்பட்டது.