உரிவரு காலை நாழிக் கிளவி
இறுதி இகரம் மெய்யொடுங் கெடுமே
டகரம் ஒற்றும் ஆவ யினான
க - து:
பொருள் : உரி என்னும் அளவைப் பெயர் வருமொழியாக வருமிடத்துநாழி என்னும் சொல்லின் இறுதி இகரம் தான் ஊர்ந்து நின்றமெய்யொடும் கெடும்; அவ்விடத்து ஒருடகர ஒற்றுத் தோன்றிநிற்கும். தோன்றிய ஒற்றை மெய்யாக்கிக் கொண்டு உகரம் ஏறிப்புணருமென்க.
எ. டு: நாழி + உரி = நாடுரி எனவரும் (நாட் + உரி = நாடுரி)‘இறுதி இகரம்’ என்றதனான் நாழியுரி எனக்கெடாது பொதுவிதியாற்புணர்தலுமாம். இங்ஙனம் இயல்பாயும் புணர்தலான் இதனை மரூஉவினுள்அடக்காமல் விதி கூறினார் என்க.
இச்சூத்திரத்து உரையாசிரியன்மார் மிகையான் அமைக்கும் முடிபுகள்பொதுவிதியான் அமையுமாகலின் அவை வேண்டா கூறலாமென அறிக.