பனிஎன வரூஉம் கால வேற்றுமைக்கு
அத்தும் இன்னும் சாரியை யாகும்
க - து:
பொருள்: நோயை உணர்த்தாமல் பருவகாலமுணர்த்தி வரும் பனிஎன்னும் சொல்லுக்கு அத்தும் இன்னும் சாரியையாக வரும்.
எ. டு: பனியத்துக் கொண்டான்; பனியிற் கொண்டான்,சென்றான், தந்தான், போயினான் எனவரும். அத்து இடப்பொருள்தோன்றச் சிறந்து நிற்றல் கருதி முற்கூறப்பட்டதென்க.