சூ. 244 :புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை
(42)
 

க - து:

புளி  என்னும்  மரப்பெயர்க்குச்  சிறப்பு   விதி   கூறுகின்றது.
 

பொருள : புளி       என்னும்       மரப்பெயர்ச்      சொல்லுக்கு
அம்முச்சாரியையாகும்.   எ. டு: புளியங்கோடு,   செதிள்,   தோல்,  பழம்
எனவரும்.
 

புளி   என்பது   ஆகுபெயராய்   மரத்தை   உணர்த்தலன்றிப்   பல
பொருளொருசொல்  அன்மையான்,  சுவையன்றிப்  புளி  என்னும் மரத்தை
உணர்த்தும்  சொல்  என   நச்சினார்க்கினியர்    கூறுதல்   ஏலாதென்க.
‘புளிங்காய்’ (ஐங்-51) என்பது செய்யுள் விகாரமென அறிக.