சூ. 246 :

வல்லெழுத்து மிகினும் மான மில்லை 

ஒல்வழி யறிதல் வழக்கத் தான 

(44)
 

க - து:  

சுவைப் பெயர்க்கு  எய்தியதன்  மேற்சிறப்பு  விதி கூறுகின்றது.
  

பொருள : மேற்கூறிய      சுவைப்புளிக்கு      மெல்லெழுத்தேயன்றி
வல்லெழுத்து  மிகினும்     குற்றமில்லை.     வழக்கின்கண்    அவ்வாறு
வருமிடமறிந்து கொள்க.
 

எ.டு: புளிக்கறி, புளிச்சோறு, புளித்துவையல்,  புளிப்பாகர்  எனவரும்.
‘‘ஒல்வழியறிதல் வழக்கத்தான’’ என்றதனான்  கணவிரி-கூதாளி முதலியவை
அம்முப்பெற்று இகரங்கெட்டு,   கணவிரங்கோடு,  கூதாளங்கோடு  எனவும்
கூதாளி   என்பது  அத்துப்  பெற்றுக்  கூதாளத்துத்   தண்பூங்கோதையர்
எனவருதலும் கொள்க. இனிக், கட்டிடி - கட்டகல் என்பவை மரூஉவாதலின்
புறனடையாற் கொள்க.