மெய்யெழுத்து ஆறன் முன்னர் அவற்றிற்கொத்த வல்லெழுத்து ஆறும் மயங்குமென்கிறது.
பொருள்:ஙஞண நமன என்னும் புள்ளியெழுத்துக்கள் நிற்க நெடுங்கணக்கினுள் அவ்வவற்றின் மேலிடத்து நிற்கும் வல்லெழுத்துக்கள் நிரலேவந்து இவற்றின் ஓசையொடு மயங்குதற்குப் பொருந்துவனவேயாகும்.
நிலைஒத்தன என மாறுக. நிலையாவது மயங்கும் நிலை. இவை மெல்லெழுத்தொடு தொடர்தலின் தம்வன்மை திரிந்து நிற்குமென்க.