எ-டு: வண்டு-வெண்சாந்து, வெண்ஞாண், நண்பன், உண்மை, மண்யாப்பு-கண்விழி எனவும், புன்கம்-நன்செய், வின்ஞாண், அன்பன், நன்மை, மென்யாழ், பொன்வளை எனவும் வரும். இவற்றுள் வெண்சாந்து என்றாற்போல இருசொல்லாக உள்ளவை தொகைமொழிகளாம். முரண்டேய்ந்தது - மன்னன்றேறினான் - இறைவன் செயல் எனப் புணர்மொழியுள்ளும் கண்டுகொள்க. |