|
சூ. 261 : | ழகர உகரம் நீடிட னுடைத்தே | | உகரம் வருதல் ஆவயி னான | (59) | க - து: | ழகர உகரச் சொல்லிற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. | பொருள் : ழகரத்தை ஊர்ந்து சொல்லிறுதியாக நிற்கும் உகரம் நீடுமிடனுடைத்து, நீண்டவழி ஓர் உகரம் அவ்விடத்து வருதலைச் செய்யும். | எ. டு: எழூஉக்கதவு, எழூஉச்சிறை; குழூஉத்தானை, குழூஉப்படை எனவரும். ‘‘எழூஉத்தாங்கிய கதவுமலைந்தவர் குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலின்’’ (புறம் - 97) ‘பழூஉப் பல்லன்ன பாவுகிர்ப் பாவடி’’ (குறுந். 59) எனவரும். | ‘இடனுடைத்தே’ என்றதனால் கொழுக்கடை, குழுத்தோற்றம் எனத்திரியாது வருதலும் கொள்க. இத்திரிபு செய்யுளின்கண் பயின்றுவரும். |
|