க - து:
பொருள் : ஒடு என்னும் மரத்தை உணர்த்தும் பெயர், மேல்உதிமரத்திற்குக் கூறிய இயல்பிற்றாகும். என்றது; மெல்லெழுத்துமிக்குமுடியும் என்றவாறு.
எ. டு: ஒடுங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். ஒடுவங்கோடெனஅம்முப்பெறுதல் பிற்கால வழக்காதலின் புறனடையாற் கொள்க.