பொருள்:ஊகார ஈற்று வினையெச்சச் சொல்லுக்கும், (முதனிலை ஏவலாக வரும்) முன்னிலை வினைச் சொல்லுக்கும் கருதுமிடத்து மேலே வகுத்துக் கூறிய இலக்கணத்தை நீக்கார்.
எ.டு :உண்ணூக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும் கைதூக்கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும் வரும். தூக்கொற்றா - பூக்கொற்றா என ஓரெழுத்து மொழியாயும் வரும். (தூ-தூவுவாயாக, பூ-பொலிவுறுவாயாக)