அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே
தக்கவழி யறிதல் வழக்கத் தான
(68)
க-து:
பொருள் : மேற்கூறிய ஊ என்னும் பெயர் னகர ஒற்றொடுஅக்குச் சாரியை உடன் பெறுதலும் உரித்தாகும். அங்ஙனம் பெறத்தக்கஇடம் சான்றோர் வழக்கினானே அறிந்து கொள்க.
எ. டு: ஊனக்குறை, செறிவு, தளர்வு, பொலிவு எனவரும். ‘தக்கவழியறிதல்’ என்பதனான் இவ்விதி இயல்புகணத்தும் ஏற்பனவற்றொடு பொருந்திவருதல் கொள்க. எ. டு: ஊன் ஞாற்சி; ஊனஞாற்சி, மெலிவு, யாக்கை, வளர்ச்சி எனவும் ஊன் அழகு, ஆட்சி எனவும் வரும்.
அக்குச் சாரியையும் ஆறாவதன் உருபையும் வேறுபடுத்துணர்க என்பார்.‘தக்கவழியறிதல்’ என்றார்.