|
சூ. 271 : | ஆடூ மகடூ ஆயிரு பெயர்க்கும் | | இன்னிடை வரினும் மான மில்லை | (69) | க-து : | ஆடூவும் மகடூவும் இன்சாரியை பெறுமென்கின்றது. | பொருள்:ஆடூ மகடூ என்னும் அவ்இரண்டு உயர்திணைப் பெயர்க்கும் வல்லெழுத்து மிகுதலேயன்றி, இடையே இன்சாரியை வரினும் குற்றமில்லை. உம்மை எச்ச உம்மை. | எ. டு:ஆடூவின்கை; மகடூவின்கை, செவி, தலை, புறம் எனவரும். |
|