சூ. 272 : | எகர ஒகரம் பெயர்க்கீ றாகா |
| முன்னிலை மொழிய என்மனார் புலவர் |
| தேற்றமும் சிறப்பும் அல்வழி யான |
(70) |
க-து : | எகர ஒகர ஈறுகள் புணருமாறு கூறுகின்றது. |
பொருள் :எகரமும் ஒகரமும் முறையே தேற்றமும் சிறப்புமாகிய பொருள் பற்றி வருதலல்லாவிடத்துப் பெயர்ச் சொற்களுக்கு ஈறாகவாரா. வினைச்சொல்லுள் ஏவலாகிய முன்னிலை மொழியினவாகிக் கசதபக்கள் வரின் மிக்குப்புணரும் என்று கூறுவர் புலவர். |
இச்சூத்திரம், வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்னும் உத்திக்கும், ஞாபகங்கூறல் என்னும் உத்திக்கும் இனமாம். அஃதாவது, எஎன வருமுயிர் மெய்யீ றாகாது (மொழி-38) ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே (மொழி-39) தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய என்ப (இடை-13) என்பவற்றான் அவை ஏகார ஓகாரங்களின் அளபெடையாய்ப் பெயர்க்கு ஈறாவனவன்றித் தாமே ஈறாகா வாரா என்பதும், |
உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் |
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும் |
இயல்பாகுநவும் உறழ்பா குநவும்என்று |
ஆயீ ரியல வல்லெழுத்து வரினே |
(தொகை-9) |
எனத் தொகைமரபினுள் கூறி ஈண்டு ‘‘முன்னிலை மொழிய’’ என்றதனான் அவை முன்னிலை ஏவலாக வரும் ஏகார ஓகாரங்களின் அளபெடை ஈறாகி நின்று, வல்லெழுத்தொடு புணருமிடத்து உறழ்ந்து புணரும் என்பதும் |
தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் |
மேற் கூறியற்கை வல்லெழுத்து மிகாஅ |
|
என அடுத்துக் கூறுவதனான், அவை உறழ்தலாகிய பொதுவிதியின் நீங்கி இயல்பாகப் புணருமென்பதும், முன்னிலை வினையாயின் மிகுமென்பதும் பெறப்படுதலான் என்க. |
விதி ஒத்தலின் ஒன்றென முடித்தல் என்பதனான் ஒகரமும் உடன் ஓதப்பட்டதென அறிக. |
எ. டு:ஏஎக்கொற்றா! சாத்தா! தேவா! பூதா! எனவும் (ஏஎ-ஏவுக) ஓஒக்கொற்றா! சாத்தா! தேவா! பூதா! எனவும் (ஓஒ-நீங்குக) வரும். |
இதனானும் இடைச்சொற்கள் பெயர் வினைகளைச் சார்ந்து பெயராயும் தொழிலாயும் நின்றுபுணருமென்பது தெளிவாகும். |
இவற்றை இடைச்சொற்புணர்ச்சி கூறுவதாக உரையாசிரியன்மார் கூறுவது ஆசிரியர் கருத்திற்கு முரணாகும். மற்றும் இச்சூத்திரம் எகரஒகரங்களின் இயல்புணர்த்துவதாக அவர் கூறுவர். அது கருத்தாயின் இது மொழிமரபின்கண் இருத்தல் வேண்டுமென்க. |