சூ. 277 :ஏஎன் இறுதிக்கு எகரம் வருமே(75)

 

க-து:

எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :ஒருசார்  ஏகார  ஈற்றுச்  சொல்லிறுதிக்கு  எகரம் தோன்றி
வரும்.
 

எ. டு:  ஏஎக்கொட்டில்,   ஏஎச்சாலை,   துளை,   புழை  என வரும்.
எகரப்பேற்றினை மேலதனொடு ஒருங்கு கூறாமையான் இயல்பு கணத்திற்கும்
எகரம் வருதல் கொள்க.
 

எ.டு :ஏஎஞாற்சி, நேர்மை, வன்மை, அழகு எனவரும்.