சூ. 278 :சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே(76)

 

க-து : 

சே என்னும் மரப்பெயர் மெல்லெழுத்துப் பெறும் என்கின்றது.
 

பொருள் :சே என்னும் விலங்கினை உணர்த்தாமல் மரத்தை உணர்த்தி
நிற்கும்  பெயர்ச்சொல், ஒடு  என்னும் மரப்பெயர்க்குக் கூறிய இயல்பிற்றாய்
மெல்லெழுத்து மிக்கு வரும் என்றவாறு.
 

எ. டு:சேங்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.