|
சூ. 279 : | பெற்ற மாயின் முற்றஇன் வேண்டும் | (77) | | க-து: | சே என்னும் விலங்குப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது. | பொருள்:சே என்னும் சொல் பெற்றத்தை உணர்த்தி நிற்குமாயின் இன்சாரியை நிறைவாகப் பெறல் வேண்டும். | எ. டு:சேவின் கோடு, செவி, தலை, புறம் எனவரும். ‘‘முற்ற’’ என்றதனான் இயல்புகணத்தும் இன்சாரியை கொள்க. | எ. டு:சேவின் ஞேயம், நலம், மடி, வால், இமில் என வரும். சேமணி எனச் சாரியை இன்றிவருதல் இடைக்கால வழக்காகலின் புறனடையாற் கொள்ளல்தகும். |
|