சூ. 279 :பெற்ற மாயின் முற்றஇன் வேண்டும்(77)

 

க-து: 

சே என்னும் விலங்குப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள்:சே  என்னும்  சொல்  பெற்றத்தை உணர்த்தி நிற்குமாயின்
இன்சாரியை நிறைவாகப் பெறல் வேண்டும்.
 

எ. டு:சேவின்  கோடு,  செவி,  தலை,   புறம்  எனவரும்.  ‘‘முற்ற’’
என்றதனான் இயல்புகணத்தும் இன்சாரியை கொள்க.
 

எ. டு:சேவின் ஞேயம், நலம், மடி, வால், இமில்  என வரும். சேமணி
எனச்  சாரியை  இன்றிவருதல்  இடைக்கால  வழக்காகலின்  புறனடையாற்
கொள்ளல்தகும்.