இந்நான்கு சூத்திரத்தானும் முறையே ஙகரத்தின்முன் ககரம் ஒன்றும், ஞகரத்தின்முன் சகரயகரங்களாகிய இரண்டும், ணகரத்தின்முன்டகசஞபமயவ என்னும் எட்டும், நகரத்தின்முன் தகரயகரமாகிய இரண்டும், மகரத்தின்முன் பகரம், யகரம், வகரமாகிய மூன்றும், னகரத்தின் முன் றகசஞபமயவ என்னும் எட்டும் மொழிக்கண் இணைந்து நிற்கும் என்பதும் பிறவந்து நில்லா என்பதும் புலப்படுத்தப்பட்டதென்க. |