சூ. 281 :சுட்டு முதலிறுதி உருபியல் நிலையும்(79)
 

க-து:  

ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயர் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :சுட்டெழுத்தினை  முதலாகக்   கொண்ட   ஐகார  ஈற்றுப்
பெயரிறுதி    வேற்றுமைப்   பொருட்புணர்ச்சிக்கண்   உருபிற்கு   ஓதிய
இலக்கணத்தான்    நிலைபெறும்.   என்றது;   வற்றுச்சாரியை   பெற்றுப்
புணருமென்றவாறு.
 

எ. டு:அவையற்றுக்கோடு;   இவையற்றுக்கோடு,  செவி,  தலை, புறம்
எனவரும்.
 

வருமொழி வரையாது  கூறினமையின் சாரியைப் பேறு இயல்புகணத்தும்
கொள்க.  எ.டு :  அவையற்று  நெஞ்சு, வயிறு, அழகு  எனவரும். வற்றின்
வகரக்கேடு புணரியலுட் கூறப்பட்டது.