|
சூ. 282 : | விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும் | | ஆமுப் பெயரும் சேமர இயல | (80) | க-து: | ஐகார ஈற்றுச் சிலமரப் பெயர்கள் புணருமாறு கூறுகின்றது. | பொருள் :விசை என்னும் மரத்தை உணர்த்தும் சொல்லும் ஞெமை, நமை என்னும் மரப்பெயர்களும் ஆகிய மூன்று பெயர்ச் சொல்லும் சேஎன்னும் மரத்திற்கு ஓதிய இலக்கணத்தனவாம். |
அஃதாவது; ஒத்தமெல்லெழுத்து மிக்குப்புணரும் என்றவாறு. விசைமரக் கிளவியொடு ஒப்பக் கூறினமையின் ஞெமை, நமை என்பவை மரப்பெயர் என்பது பெற்றாம். | எ. டு:விசைங்கோடு; ஞெமைங்கோடு; நமைங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். | ஒன்றென முடித்தல்; தன்னின முடித்தல் என்பதனான் உழை, அமை, உடை என்னும் மரப்பெயர்களுக்கும் இவ்விதி கொள்க. | எ.டு :உழைங்கோடு; அமைங்கோடு; உடைங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். |
|