சூ. 285 : | கொடிமுன் வரினே ஐஅவண் நிற்பக் |
| கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி |
(83) |
க-து : | பனை என்பதன்முன் கொடி என்னும் சொல்வரின், எய்தியது விலக்கிப் பொதுவிதி பெறும் என்கின்றது. |
|
பொருள் :(அதிகாரத்தால் நின்ற) பனை என்னும் சொல்லின்முன் கொடி என்னும் சொல்வரின், ஐகாரம் கெடாது நிற்ப வல்லெழுத்து மிகுதல் நீக்கும் நிலைமைத்தன்று. |
எ. டு:பனைக்கொடி எனவரும். பனையை எழுதிய கொடி என்பது பொருள். பனைமரத்திற்குக் கொடியின்மையின் இவ்விதி விதந்து கூறப்பட்டது. |
‘‘அவண்நிற்ப’’ என்றதனான் பனையின்முன் திரள் என்னும் சொல்வரின் பனைத்திரள் - பனந்திரள் என உறழ்ந்து வருதல்கொள்க. மெலிமிகும் என ஆசிரியர் கூறாமையின் பனைந்திரள் எனக்காட்டுவது பொருந்தாதென்க. |