சூ. 286 :திங்களும் நாளும் முந்துகிளந் தன்ன(84)
 

க-து:

ஐகார   ஈற்றுத்  திங்கட்   பெயரும்  நாட்பெயரும்  புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள் :ஐகார ஈற்றுத்  திங்கட்பெயரும் நாட்பெயரும் இகர ஈற்றுள்
கிளந்துகூறிய     அவ்விதியினவாகும்.    என்றது;     திங்கட்பெயருக்கு
இக்குச்சாரியையும், நாட்பெயருக்கு ஆன்சாரியையும் வரும் என்றவாறு.
 

எ. டு:தைக்குக்கொண்டான்,   சித்திரைக்குக்கொண்டான்   எனவரும்.
இவை திங்கட்பெயர். கேட்டையாற் கொண்டான், சித்திரையாற் கொண்டான்
எனவரும். இவை நாட்பெயர்.