சூ. 288 : | செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் |
| ஐயென் இறுதி அவாமுன் வரினே |
| மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் |
| டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் |
(86) |
க-து : | வேட்கை என்னும் சொற்குச் செய்யுள் வழக்காகிய முடிவு கூறுகின்றது. |
|
பொருள் :செய்யுள் வழக்கின்கண் வேட்கை என்னும் சொல்லிறுதியாகிய ஐகாரம், அவா என்னும் சொல் வருமொழியாக வரின் தான் ஊர்ந்து நின்ற மெய்யொடும் கெடும். ஆண்டு நின்ற டகாரம் ணகாரமாகத் திரிதல் வேண்டும். |
எ. டு:வேட்கை+அவா = வேணவா. “வேணவா நலிய வெய்ய உயிரா” (நற் - 61) எனவரும். வேட்கையான் எழுந்த அவா என்பது பொருள். வேட்கையவா எனப் பொதுவிதியாற் புணரின் அல்வழியாம். வேட்கையாகிய அவா என்பது பொருள். வேட்கை என்பது வேண் எனத் திரிதற்கு வருமொழி காரணமாகாமையின் செய்யுள் வழக்காயிற்றென உணர்க. |