ஓகாரஈற்று இடைச் சொல் சிலவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது.
பொருள் :எதிர்மறைப் பொருளை எச்சமாகக் கொள்ள நிற்கும் ஓகாரமும் வினாப்பொருள்பட நிற்கும் ஓகாரமும் ஐயப்பொருள் தந்து நிற்கும் ஓகாரமும் வல்லெழுத்துமிகாமல் இயல்பாகும்.
எ.டு :யானோ கொண்டேன்?, சென்றேன், தந்தேன், போயினேன் எனவும்; நீயோ கொண்டாய்?, சென்றாய், தந்தாய், போயினாய் எனவும்; காடோ, கடறோ, புற்றோ, புதரோ எனவும் வரும்.