சூ. 291 :ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற் றியற்றே(89)
 

க-து:

ஒழியிசை ஓகாரத்திற்கு மேற்கூறிய விதி பொருந்துமென்கின்றது.
 

பொருள்:ஒழியிசை   ஓகாரத்தின்   நிலையும்  மேல்மொழிந்தவற்றின்
இயல்பிற்றாய்க் கசதபக்கள்வரின் மிகாது இயல்பாகும்.
 

எ.டு:கொளலோ   கொண்டான்,  செலலோ   சென்றான்   எனவரும்.
கொண்டுய்யப் போயினானல்லன் என்பது பொருள்.
 

இனித்,  தன்னின  முடித்தல்   என்னும்  உத்தியான்,  பிரிநிலையாயும்
தெரிநிலையாயும்,   சிறப்பாயும்,  எண்ணுநிலையாயும்   வரும்   ஓகாரமும்
இயல்பாதல் கொள்க.
 

எ. டு:யானோ தேறேன்  அவர்  பொய் வழங்கலரே எனவும் நன்றோ
தீதோ  அவர்  கண்டது எனவும்  ஓஒ கொண்டான் எனவும் (சிறப்பின் ஓ
ஆதலின் ஒகரம் தோன்றிற்று)  குன்றுறழ்ந்த  களிறென்கோ, கொய்யுளைய
மாவென்கோ எனவும் வரும். ஈற்றசை ஓகாரத்திற்கும் இஃதொக்கும்.