கோ என்னும் சொல் இல்என்பதனொடு புணர்தற்கண் எய்தும் சிறப்பு விதி கூறுகின்றது.
பொருள் :கோ என்னும் ஓகார ஈற்றுச் சொல்லை ‘இல்’ என்னும் சொல்லொடு கூட்டிச் சொல்லின் ஒகரந் தோன்றாது இயல்பாகப் புணரும். ஏற்புழிக்கோடல் என்பதனான் ‘கோ’ நிலைமொழி எனக் கொள்க.
எ.டு :கோவில் எனவரும். கோயில் எனவும் வரும் கோயில்=அரசனது இல்லம் என்பது பொருள்.