|
8. புள்ளிமயங்கியல் | புள்ளி எழுத்துக்கள் பெயர் முதலிய நால்வகைச் சொற்களிலும் இறுதியாக நின்று இருவழியும் நாற்கணத்தொடும் புணரும் இயல்புணர்த்தலின் இவ்வோத்துப் புள்ளிமயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று. | “மெய்யே உயிரென் றாயீ ரியல’’ எனப்பட்டவற்றுள் மெய்யீறு புணருங்கால் அஃது ஒலிப்புடையதாகிப் புணரும் என்பதை ‘‘மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்’’ என உணர்த்தினமையின், மெய்ம்மயங்கியல் என்னாது புள்ளிமயங்கியல் என்றார். | ‘‘உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்’’ (புண-5) என்னும் சூத்திரத்துள் நிறுத்தமுறையாற் கூறுதலின் இவ்வியல் உயிர் மயங்கியலொடு இயைபுடைத்தாயிற்று. |
புள்ளியீற்றின்முன் உயிர்முதன் மொழிவரின் எய்தும் இலக்கணம் பற்றிப் பொதுவகையான் புணரியலுள்ளும் (புண - 35) தொகை மரபினுள்ளும் (தொகை - 18) பெறப்படுதலின் ஈண்டுப் புள்ளியீறு நின்று உயிர்மெய்ம் முதன்மொழிகளொடு புணருமாறு பற்றி முதற்கண் கூறத் தொடங்குகின்றார். |
சூ. 296 : | ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் | | அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் | | வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே | | உகரம் வருதல் ஆவயி னான | (1) | க-து : | ஞகார ஈறு இருவழியும் வன்கணத்தொடு புணருமாறு கூறுகின்றது. | | பொருள்:ஞகாரத்தை ஈறாக உடைய முதனிலைத் தொழிற்பெயர், அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும், தன்முன்னர் வல்லெழுத்து வந்து புணரின் அவ்வெழுத்துமிகும், அவ்விடத்து நிலைமொழிக்கண் ஓர் உகரம் வருதலைச் செய்யும். | எ. டு:உரிஞுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். இவை அல்வழி, உரிஞுக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவரும். இவை வேற்றுமை. |
|