சூ. 297 :ஞநமவ இயையினும் உகரம் நிலையும்(2)
 

க-து:

ஞகர     ஈற்றுத்      தொழிற்பெயர்     மென்கணத்தொடும்
இடைக்கணத்தொடும் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :மேற்கூறிய ஞகர ஈற்றுத் தொழிற்பெயர், வன்கணமேயன்றி
ஞநமவ என்பவற்றை முதலாக உடைய சொற்கள் வந்து இயையினும் உகரம்
வந்து நிலைபெறும்.
 

எ. டு:உரிஞு  ஞான்றது,  நீண்டது, மாண்டது, வலிது எனவும்; ஞாற்சி,
நீட்சி, மாட்சி, வன்மை எனவும் வரும். யகரத்தொடும் உயிர்க்கணத்தொடும்
புணருமாறு   தொகைமரபினுள்  பெறப்படுதலின்  ‘ஞநமவ’   எனவிதந்து
கூறினார்.