சூ. 298 :நகர இறுதியும் அதனோ ரற்றே(3)
 

க-து :

நகர ஈற்றுச்சொற்களும் மேற்கூறியாங்குப் புணருமென்கின்றது.
 

பொருள் :நகர  ஈற்றுச்   சொல்லிறுதியும்  மேற்கூறிய  ஞகர  ஈற்று
விதியொடு ஒருதன்மைத்தாம்.
 

என்றது; உகரம் பெறுதலும், கசதபக்கள் வரின் மிகுதலும்,  ஞநமவக்கள்
வரின்  மிகாது  இயல்பாதலும்  ஆம்:  வேற்றுமைக்கு விதி மேல் விதந்து
கூறுதலின் இஃது அல்வழிக் கென்பது பெறப்படும்.
 

எ.டு : பொருநுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும், ஞான்றது, நீண்டது,
மாண்டது,  வலிது  எனவும்  வரும். ‘வெரிந்’  என்பதனொடும் இவ்வாறே
கூட்டுக.