சூ. 299 :வேற்றுமைக்கு உக்கெட அகரம் நிலையும்(4)
 

க-து:

நகர ஈற்றுப் பெயர்க்கு வேற்றுமைப் புணர்ச்சி கூறுகின்றது.
  

பொருள் :மேற்கூறிய நகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
உகரம் கெட அகரம் வந்து நிலைபெறும்.
 

எ.டு :பொருநக்  கடுமை,  சிறுமை,  தீமை,   பெருமை  என  வரும்.
‘‘உகரங்கெட’’  என்றதனான் ‘‘உயவல் யானை  வெரிநுச் சென்றன்ன’’ என
உகரம் கெடாது நிற்றலும் கொள்க.