சூ. 3 :

அவற்றுள், 

அ இ உ 

எ ஒ என்னும் அப்பா லைந்தும் 

ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப  

(3)
 

க - து:

தனித்துவரல்   மரபினவற்றுள்  ஒருசார் எழுத்துக்கட்கு அளவும்
தன்மையும் பெறப்படுமாற்றான் குறியீடு கூறுகின்றது.
 

பொருள்:மேற்கூறிய  முப்பத்து  மூன்றனுள்  அ இ உ எ ஒ  என்னும்
அக்கூற்று  எழுத்து  ஐந்தும்  ஒவ்வொன்றும்  ஒரு  மாத்திரையளவினதாய்
இசைக்கும். அதனான் அவற்றைக் குற்றெழுத்து எனப் பெயரிட்டுக்  கூறுவர் ஆசிரியர்.   அளபென்றது   ஈண்டுச்   செவிப்புலனாகும்     ஓசையினது
மாத்திரையை. அதனான் குற்றெழுத்தென்பது  மாத்திரையளவையான்  வந்த
காரணக்குறியீடு என்பது புலப்படுத்தப் பெற்றது. ‘அப்பால்’  என்றது  ஐந்து கூறுபட்ட  என்றவாறு.   இசைக்கும்   என்றது   அவற்றின்   இலக்கணத் தன்மையையாகும்.       உயிர்எழுத்துக்கட்கு         இசையளவொன்றே சிறப்பிலக்கணமாகலின்     இசைத்தலை      உடன்கூறினார்.   இவ்இசை
‘மெய்தெரிவளியினது இசை‘ என்பது பிறப்பியலுள் கூறுவார்.