சூ. 302 :

ணகார இறுதி வல்லெழுத் தியையின்

டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே 

(7)
 

க-து:

ணகார ஈறு வேற்றுமைக்கண் புணரும் பொதுவிதி கூறுகின்றது.
 

புள்ளியீறுகளின்  திரிபு, வேற்றுமைப்  புணர்ச்சிக்கண் மிக்கு நிகழ்தலின்
இவ்வியலுள்  பெரும்பான்மையும் வேற்றுமைப் புணர்ச்சி முற்கூறிப் பின்னர்
அல்வழிப் புணர்ச்சி கூறுகின்றார்.
 

பொருள்:  ணகர ஒற்றினை  இறுதியாக  உடைய பெயர், வேற்றுமைப்
பொருட்  புணர்ச்சிக்கண்  வல்லெழுத்துவரின்  ணகரம் டகரமாகத் திரியும்.
பொருட்கென்றது வேற்றுமை மயக்கம்.
 

எ. டு:  மட்குடம், சாடி, தூதை, பானை எனவரும். கூறப்படும் விதிகள்
உருபொடு     புணர்ந்து     நிற்கும்    மொழிகட்கும்    ஒக்குமென்பது
மேல்விளக்கப்பட்டமையான்   ஏழாவதன்  உருபு  புணர்ந்து  ணகர ஈறாக
நிற்கும்  சொற்களுக்கும்  இவ்விதி  ஒக்கும்.  எ.டு : அவன்கட் சென்றான்,
ஆங்கட்சென்றான் எனவரும்.