எ. டு: ஆண்கல்வி - பெண்கல்வி, சால்பு, திட்பம், பண்பு எனவரும். ஆண்கை; பெண்கை, செவி, தலை, புறம் எனக் காட்டின், கை முதலியவை இருதிணைக்கும் பொதுவானவை யாதலின் அவை அப்பொதுச் சூத்திரத்துள் அடங்குமென்க. ஆண்மை, பெண்மை என்னும் பண்புகள் உயர்திணைக்குரியவை என்பதைக் ‘குடிமை ஆண்மை இளமை மூப்பே’ (கிளவி-57) என்னும் சூத்திரத்தானறிக. |