|
சூ. 304 : | ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே | (9) | | க-து: | ஆண் என்னும் மரப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது. | பொருள்:‘ஆண்’ என்னும் மரத்தை உணர்த்தும் சொல் அரை என்னும் மரப்பெயரியல்பிற்றாய் அம்முச்சாரியை பெற்றுப் புணரும். | எ. டு:ஆணங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். | சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின் இயல்பு கணத்துங்கொள்க. அவ்வழிச் சாரியை மகரம் (சூ. 310) பொது விதியாற்கெடுமென அறிக. எ.டு: ஆணநார், ஆணவேர், ஆணவெழில் எனவரும். |
|