சூ. 305 :விண்ணென வரூஉம் காயப் பெயர்வயின்

உண்மையும் உரித்தே அத்தென் சாரியை

செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை
(10)
 

க-து:

விண் என்னும் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :  விண்  ணென்னும்  குறிப்பன்றி  ஆகாயத்தை  உணர்த்தி
வரும்    சொல்லின்கண்,    செய்யுள்   வழக்கிடத்து   அத்து   என்னும்
சாரியை உளதாதலும் உரியதாகும்.
 

செஞ்சுடரின்   வெப்பத்தால்   காய்கின்ற   இடமாதலின்   (காய்+அம்)
விண்வெளிக்குக்  காயம்  என்பது  காரணப்  பெயர்.  அஃது வியப்பையும்
பரப்பையும்    உணர்த்தும்    ஆ   என்னும்   உரிச்சொல்லொடு   கூடி
‘‘ஆகாயம்’’ என வழங்கும். இது தமிழ்ச்சொல்.
 

எ. டு:   விண்ணத்துக்    கொட்கும்,    சுழலும்,   திரியும்,   பரவும்
எனவரும்.  ஏனைக்கணத்தும்  விண்ணத்து  நிலவும்,  வளரும்,  இயங்கும்
எனவரும்.
 

‘‘உண்மை’’  என்றது  உண்டாகி  வரும் என்னும் குறிப்புப் பொருள்பட
நின்றது.  உம்மையான்  சாரியை  இன்றி  “விண்குத்து நீள்வரை’’ எனவும்
வரும்.  விண்வத்துக்கொட்கும்  என  உடம்படுமெய்  பெறுதலும்  கொள்க
என்பார்  நச்சினார்க்கினியர்.  அவர்  ‘உடம்படுமெய்’  என்பதன்  இயல்பு
நோக்கினாரில்லை.;