|
சூ. 307 : | கிளைப்பெய ரெல்லாம் கொளத்திரி பிலவே | (12) | | க-து : | ணகார ஈற்றுக் கிளைப் பெயர்கள் புணருமாறு கூறுகின்றது. | | பொருள் :தொழில் முதலிய காரணங்களாற் பிறந்த ணகர ஈற்றுக் கிளைப் (சாதி) பெயர்கள் எல்லாம் மேற்கூறிய திரிபு கொள்ளுதல் இல்லை. அவை இயல்பாகப் புணரும். திரிபு கொளஇல என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. | எ. டு:உமண்குடி, சேரி, தோட்டம், பாடி எனவரும். | பாண்குடி, வேளாண்குடி எனக் கிளைப்பெயர் பலவாக உள்ளமையான் எல்லாம் பாணச்சேரி என்றார். ‘கொளத்திரிபிலவே’ என்றதனான் எனச்சாரியை பெறுதலும் கொள்க. |
உரையாசிரியன்மார் இச்சூத்திரத்துமிகையான் மண்ணப்பந்தம், எண்ண நோலை எனப்பிற பெயர்கள் அகரச்சாரியை பெறுதலையும் கவண்கால், பரண்கால் என வேற்றுமைக்கண் திரியாது வருதலையும் உருபு ணகரம் திரிதலையும் அடக்குவர். | ஆசிரியர் கிளைப்பெயரெல்லாம் என விதந்து கூறியுள்ளமையான் அகரச்சாரியை பெறுதலையும் வேற்றுமைக்கண் இயல்பாதலையும் புறனடையாற் கொள்ளல் நேரிதாம். உருபு திரிதல் எடுத்தோத்தானே அமையும் எனமேல் விளக்கப்பட்டது. |
|