இனி எவன், எவள், எவர், எது, எவை என இடைக்காலத்துத் தோன்றிய வழக்கு யாவன், யாவள், யாவர், யாது, யாவை என்னும் வினாப் பெயர்களின் திரிபாகும். எங்ஙனம் என்பது யாங்ஙனம் என்பதன் திரிபு. எக்கடல், எந்நாடு, எவ்வீடு, எவ்வூர் என்றாற்போல வரும் இடைக்கால வழக்கினைக் “கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும்” (இடை. 48) என்னும் புறனடையாற்கொள்க. |