சூ. 315 : | அகமென் கிளவிக்குக் கைம்முன் வரினே |
| முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும் |
| வரைநிலை யின்றே ஆசிரி யர்க்க |
| மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான |
(20) |
க-து: | அகம் என்னும் சொல் கை என்பதனொடு புணருங்கால் எய்தும் நிலை மொழித் திரிபு கூறுகின்றது. |
|
பொருள் :அகம் என்னும் சொல் முன்னர்க் கை என்னும் சொல்வரின் முதற்கண் நிற்கும் அகரம் தான் கெடுதலினின்று ஒழிய அதற்கு முன்னின்ற ககர உயிர் மெய்யும் மகர ஒற்றும் கெடுதலும் ஆசிரியர்க்கு நீக்கும் நிலைமைத்தின்று, அவ்விடத்துக், கை என்பதற்குரிய மெல்லெழுத்துமிகும். |
எ. டு:அகம்+கை = அங்கை எனவரும். பொதுவிதியான் மகரம் கெட்டு நிற்பவும் முன்னவை என அதனையும் அடக்கிக்கேடு கூறினமையான் அகஞ்சிறை எனற்பாலது அஞ்சிறை என வருதலும் கொள்க. |