|
சூ. 317 : | அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி | | ஒத்த எண்ணு முன்வரு காலை | (22) | க-து : | மகர ஈற்று எண்ணுப் பெயர்க்காவதொருவிதி கூறுகின்றது | | பொருள் :ஆயிரம் என்னும் சொல்லின் இறுதி, இயைவதற்கொத்த எண்ணுப்பெயர் வருமிடத்து அத்துச்சாரியையொடு பொருந்திப் புணரும். | எ.டு: ஆயிரத்தொன்று - ஆயிரத்துமூன்று - ஆயிரத்துப்பத்து, ஆயிரத்துநூறு எனவரும். இவை உம்மைத் தொகை. |
அத்துச்சாரியை பெறுதற்கு ஒவ்வாத எண்ணுப்பெயர் வரின் ஆயிரங்கோடி, ஆயிரமாயிரம் எனப் பொதுவிதி பெறும் என்க. மகர ஈற்று எண்ணுப்பெயர் இஃதொன்றேயாதலின் விதந்து கூறினார். | நச்சினார்க்கினியர் ஆயிரத்துக்குறை - கூறு என்பவற்றை ஈண்டே இலேசினான் முடித்துக் கொள்க என்பார். ஆசிரியர் வருமொழியை விதந்து கூறியுள்ளமையான் அவர் கருத்து ஒவ்வாதென்க. ஆயிரத்துக்குறை என்பது ஆயிரமும் அதனுடைய குறையும் எனப் பொருள்தருதலின் அஃது வேற்றுமை முடிபாய் அத்துச்சாரியை பெற்றது என்க. |
|