மற்றிஃது “அடையொடு தோன்றினும் புணர்நிலைக்குரிய” (புணரியல்-8) என்பதனான் அடங்காதோ எனின்? அடங்காது. என்னை? செந்தாமரை, கருங்குவளை, பெருஞ்சாத்தன் எனப்பிற பெயர்கள் அடையடுத்து வருங்கால் அடையடுத்த பெயர்ப்பொருள் திரிபுறாமல் நிற்கும். எண்ணுப் பெயர் அடையடுத்து வரின் பொருள் வேறாகி நிற்கும். ஆதலின் என்க. |