சூ. 32 :ஆ ஏ ஓ அம் மூன்றும் வினாஅ

(32)
 

க-து:

உயிர்  நெட்டெழுத்துள்   மூன்றற்குச்  சிறப்புக்  குறியீடு
கூறுகின்றது.
 

பொருள்:ஆஏஓ  என்னும்  அம்மூன்று  எழுத்துக்களும்  வினா என
வழங்கப்பெறும். இதுவும் ஆட்சிப்பொருட்டாய இலக்கணக் குறியீடேயாம்.
 

எ - டு :“மாறுகொள்  எச்சமும்  வினாவும்”  (உயிர்மய-22)  எனவும்,
“வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்” (வினை-47)  எனவும்,  மேல்
ஆளுமாறு கண்டுகொள்க.
 

இனி, யா என்னும்  உயிர்மெய்எழுத்துப்  பன்மை  வினாப்  பெயராயும்
யாவன், யாவள், யாவர், யாது, யாவை என்னும் வினாப்பெயர்ச் சொற்களின்
உறுப்பாயும் வருதலன்றித் தனித்து வினா இடைச்சொல்லாக வாராதென்க.
 

‘யார்’  என்பது  வினாவினைக்   குறிப்புச்சொல்.   யாங்கு - யாண்டை
என்பவை இடைச்சொல்லடியாகப் பிறந்த  பெயர்கள். “யாவென்  வினாவின்
ஐயென்  இறுதியும்”  (உருபி-3)  “யாவினா   மொழியே”   (குற்-23)  என
ஆசிரியர் விதந்தோதுமாறு கண்டு கொள்க.
 

இவ்    இரு  சூத்திரங்கட்கும்  உரையாசிரியன்மார்  கூறும்  உரையும்
விளக்கமும் இந்நூல் நெறிக்கு ஏற்புடையன வாகாமை தெரியலாம்.