|
சூ. 322 : | அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் | | எல்லாம் எனும்பெயர் உருபியல் நிலையும் | | வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது | (27) | க-து: | எல்லாம் என்னும் பொதுப்பெயர் அஃறிணையாக நின்று இருவழியும் புணருமாறு கூறுகின்றது. | | பொருள்:எல்லாம் என்னும் பொதுப்பெயர் அஃறிணைப் பொருட்கண் வருங்கால் அல்வழியிற் கூறினும் வேற்றுமைவழியிற் கூறினும் உருபுபுணர்ச்சிக்கு ஓதிய இயல்பிற்றாய் நிற்கும். வேற்றுமையல்லாத வழிச்சாரியை நிலைபெறாது. |
எனவே, வேற்றுமையாயின் (வற்றுச்) சாரியை வருமென்பதாயிற்று. உயர்திணைவிதி மேல் விதந்து கூறப்படுதலின் இஃது அஃறிணைக்கு என்பது பெறப்படும். உருபியல் நிலைதலாவது, வற்றுச்சாரியை பெறுதலும் இறுதிக்கண் உம்முப் பெறுதலுமாம். | எ.டு :எல்லாக்குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும் என அல்வழிக்கண் சாரியை இன்றிப் புணர்ந்தது. மகரம் பொதுவிதியாற் கெட்டு, வல்லெழுத்து மிக்கது என்க. எல்லாவற்றுக்கோடும், செவியும், தலையும், புறமும் என வேற்றுமைக்கண் வற்றும் இறுதிக்கண் உம்மும் பெற்று முடிந்தது. | அடுத்த நூற்பா ‘‘மெல்லெழுத்து மிகினும் மான மில்லை’’ எனவருதலின் ஈண்டு வல்லெழுத்து மிகுதல் உய்த்துணரப்பட்டது. (இவ்வாறு விதிபெறப்பட வைப்பது இவ்வாசிரியரியல்பென அறிக) பிறகணங்கள் வரின் மேற்கூறியாங்குக் கொள்க. | எ.டு :எல்லாநாளும், மணியும், யாழும், வாயிலும், அவிலும் எனவரும். |
|