சூ. 324 :உயர்திணை யாயின் உருபியல் நிலையும்(29)
 

க-து:

எல்லாம்  என்னும்   பொதுப்பெயர்   உயர்திணையாய்   நின்று
இருவழியும் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :எல்லாம்    என்னும்     பொதுப்பெயர்    உயர்திணைப்
பொருட்டாய்   வருமாயின்   இருவழியும்   உருபு   புணர்ச்சிக்கு  ஓதிய
இயல்பிற்றாய்   நிற்கும்.   வேற்றுமை   யல்வழிச்சாரியை   நிலைபெறாது.
இருவழியும்  என்பதும்,  வேற்றுமை யல்வழிச்சாரியை நிலையாது என்பதும்
அதிகாரத்தாற் பெறப்பட்டன.
 

உருபியல் நிலையலாவது: ‘உயர்திணை யாயின் நம்மிடை வருமே’ என்ற
இலக்கணம் பெற்று நிற்றலாம்.
 

எ.டு :வேற்றுமைக்கண்:  எல்லாநங்கையும், செவியும், தலையும், புறமும்
எனவரும்.  கை   முதலியவை   உயர்திணை  உறுப்புக்கள்   என்பதனை
நம்முச்சாரியை  தெளிவுபடுத்தி  நின்றது. ஏனைக்  கணங்களொடும் ஒட்டிக்
கொள்க.
 

இனி அல்வழிக்கண்: எல்லாக் குறியேமும் எல்லாச் சிறியேமும், எல்லாத்
தீயேமும்,  எல்லாப்  பெரியேமும்  என   வரும். ஏனைக் கணங்களொடும்
ஒட்டுக.   ‘எல்லாம்’     எனும்     பொதுப்பெயர்     உயர்திணைக்கண்
தன்மையிடத்தல்லது   ஏனையிடத்து   வாராது   என்பது    பெயரியலுட்
பெறப்படும்.