சூ. 329 :

வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும்

தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை 

(34)
 

க-து:

மேற்கூறியவற்றுள்  இரண்டற்கு   வேற்றுமைக்கண்  சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள் : வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் மேல் நின்ற ஈம், கம்
என்னும் இரண்டும் அக்கு என்னும் சாரியையொடு தோன்றி வரும்.
 

எ. டு:ஈமக்குடம்;   கம்மக்குடம்,  சாடி,  தூதை,  பானை  எனவரும்.
ஏனைக் கணங்களொடும் ஒட்டிக் கொள்க.
 

ஏற்புழிக்கோடல்  என்பதனான்  ஏனையிரண்டும் என்றது ஈமும் கம்மும்
எனக்  கொள்க.  ‘‘மேனை’’ இரண்டும்  எனப் பாடம் இருத்தல் வேண்டும்
எனக்கருத  வேண்டியுளது. மேனை  மேல்நின்றவை. அஃதாவது முதற்கண்
நின்ற ஈமும் கம்மும் என்பது இப்பாடத்தின் பொருளாம்.