|
சூ. 333 : | மன்னும் சின்னும் ஆனும் ஈனும் | | பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் | | அன்ன இயல என்மனார் புலவர் | (38) | க-து: | ஒருசார் னகரஈற்று இடைச்சொற்கும் னகர ஈற்றுப் பெயர்க்கும் வினையெச்சத்திற்கும் மேற்கூறிய விதியை எய்துவிக்கின்றது. | பொருள் : மன், சின், ஆன், ஈன், பின், முன் என்னும் சொல்லீறுகளும், னகரஈற்று வினைஎச்சச் சொல்லிறுதியும் மேற்கூறிய இயல்பினவாய் வல்லெழுத்தியையின் றகரமாகும். | இசின் என்பது சின் என முதற்குறையாய் நின்றது. மன், சின் என ஓதப்பட்டனவேனும் அவை பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும் என்னும் இலக்கணத்திற்றிரியா என்க. மேல் வரும் இடைச் சொற்களுக்கும் இவ்விளக்கம் ஒக்கும். ஆன், ஈன் என்பவை சுட்டுப் பெயர்கள்; பின், முன் என்பன இடப்பெயரும் காலப்பெயருமாம். | எ - டு : அதுமற் கொண்கன்றேரே - காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை எனவும், ஆற்கொண்டான், ஈற்கொண்டான் எனவும், பிற்கிடந்தான், முற்சென்றான் எனவும் தரிற்கொள்ளான், காணிற் பெறுவான் எனவும் வரும். |
பின், முன் என்பவை காலப் பொருளவாய் நிற்குங்கால் பின்கொள்வான், முன்கொண்டான் என இயல்பாதலைப் புறனடையாற் கொள்க. ஊன் என்னும் சுட்டுப் பெயர் திரியாமையான் விலக்கப்பட்டது. |
|