க-து:
பொருள் : தேன் என்னும் சொல் மெல்லெழுத்து வந்து புணரின்மெல்லெழுத்து மிகுதலொடு மிகாமையுமாக உறழும்.
எ.டு : தேஞ்ஞெரி - தேஞெரி, தேந்நுரை - தேநுரை, தேம்மலர் -தேமலர் எனவரும். னகரம் அதிகாரத்தாற் கெட்டது.
உரையாசிரியன்மார் ‘இறுதியொடு உறழும்’ எனப்பாடங் கொள்வர்.அஃது மெல்லெழுத்து என்னும் எழுவாயொடு இயையாமையான் அப்பாடம்பொருந்தாமை புலனாம்.