இறாஅல் தோற்றத்தின்கண் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
பொருள் : தேன் என்னும் சொல் இறால் என்னும் சொல் வருமிடத்து இரட்டித்த தகர ஒற்றொடு நிற்றலும் உரித்தாகும். தகரம் மிகும் என்றதனான் னகரக்கேடு தானே பெறப்படும். ஒற்றுமிகு தகரம் என்றதனான் இரட்டித்தல் புலனாகும்.