|
சூ. 348 : | ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு | | பெயரொற் றகரந் துவரக் கெடுமே | (53) | க-து: | னகர ஈற்றுப் பெயர் இரண்டற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் : ஆதன், பூதன் என்னும் பெயர்கள், தந்தை என்னும் முறைப்பெயர்வரின், மேற்கூறிய திரிபுகளொடு நிலைமொழிப் பெயருள் எஞ்சி நின்ற ஒற்றும், வருமொழிமுதலிற் றிரிந்து நின்ற அகரமும் முற்றக்கெடும். பெயரொற்றும் அகரமும் என விரித்துக் கொள்க. | எ.டு :ஆதன் + தந்தை உ ஆத் + அந்தை உ ஆ + ந்தை = ஆந்தை எனவரும். பூதன் + தந்தை உ பூந்தை எனவரும். | ஆதன், பூதன் என்பவற்றின் முதனிலையாகிய குறைஉரிச் சொற்கள் ஆத், பூத் என்பவையாகலின் அவை மெலிந்து தை என்பதனொடு கூடி ஆந்தை, பூந்தை என நின்றமையறிக. இதுவும் தொல்லோரது வழக்காறு நோக்கிக் கூறிய இலக்கணமே என்க. | ‘துவர’ என்பதனான் அழான், புழான் என்பவையும் அழாந்தை, புழாந்தை எனவருதல் கொள்க என்பார் உரையாசிரியர். அவை சான்றோர் வழக்காயின் புறனடையாற் கொள்ளல் தகும். |
|