சூ. 349 :சிறப்பொடு வருவழி இயற்கை யாகும்
(54)
 

க-து:

மேற்கூறிய   இயற்பெயர்கள்  அடையொடுவரின்  இயல்பாகும்
என்கின்றது.
 

பொருள் :  மேற்கூறிய  இயற்பெயர்கள் சிறப்பாகிய அடையொடு கூடி
நின்றவழித் திரிபின்றிப் புணரும்.
 

‘இயற்கையாகும்’ எனப்  பொதுப்படக் கூறினமையின்  வருமொழியாகிய
தந்தை என்னும் சொல்லும் திரிபுறாது இயல்பாக வரும் எனக் கொள்க.
 

எ - டு:  நெடுஞ்சாத்தன்    தந்தை,     பெருங்கொற்றன்    தந்தை
கருங்குழலாதன் தந்தை, கணியன்பூதன்தந்தை, ஆதன்தந்தை,  பூதன்தந்தை எனவரும்.