|
சூ. 350 : | அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும் | | நிற்றலும் உரித்தே அம்மென் சாரியை | | மக்கள் முறைதொகூஉம் மருங்கி னான | (55) | க-து: | மேற்கூறிய இயற்பெயர்கள் மக்கள் முறைமைச் சொல்லொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : மேற்கூறிய னகாரஈற்று இயற்பெயர்கள்முன் மக்கள் முறைதோன்ற நிற்கும் சொற்கள் புணருமிடத்து, அவை மெய்யொழித்து இறுதி கெட்டுநின்ற வழியும், (உம்மையான்) மெய்யொடு இறுதி கெட்டு நின்ற வழியும் அம் என்னும் சாரியை பெற்று நிற்றலும் உரித்தாகும். | எ - டு: கொற்றங்கொற்றன் - மூலங்கீரனார் - பூதம்புல்லனார், சல்லியங்குமரனார் எனவரும். பூதன் + தத்தனார் என்பது மெய்யொடுங்கெட்டுப் பூதத்தனார் (அகம்-74) எனவும் வரும். | உம்மையான் கொற்றங்குடி, சாத்தங்குடி எனவருதலும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர். அவை வழூஉவழக்காதலின் ஒவ்வாதென்க. கொற்றமங்கலம், சாத்தமங்கலம் என்பவை உயிரீறாகிய (தொகை-11) என்னும் தொகைமரபுச் சூத்திரத்து ‘‘எல்லா வழியும்’’ என்பதனான் முடியும் என்க. |
|